மகாராஷ்டிர மாநிலத்தில் தள்ளாத வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி
பிழைப்பு நடத்தும் மூதாட்டி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புனே
பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாபாய் பவார். 85 வயதான இந்த மூதாட்டி,
வயிற்றுப் பிழைப்புக்காக தெருக்களில் சிலம்பம் சுற்றி வித்தைக் காட்டி
வருகிறார்.
லத்தி கத்தி எனப்படும் கம்பு சுற்றும் இந்த வித்தையை,
தான் எட்டு வயதில் இருந்து செய்து வருவதாக கூறும் சாந்தாபாய், எந்த
வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என்று தனது தந்தை கற்றுக்கொடுத்திருப்பதாக
கூறுகிறார்.
"கடவுள் அருளால் இத்தனை வயதிலும் என்னால் இந்த
வித்தையை செய்ய முடிகிறது. இதன்மூலம் என் வாழ்வாதாரத்துக்கு தேவையான பணம்
சம்பாதிக்க முடிகிறது. என் பேரக்குழந்தைகள் தங்கள் படிப்பைத்
தொடர்கிறார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என்று மூதாட்டி
சாந்தாபாய் பவார் தெரிவித்துள்ளார்
Post a Comment
Post a Comment